Overblog
Edit page Follow this blog Administration + Create my blog
/ / /
இணையம் சொல்லும் பாடம் (பெண்களுக்கு!)
  அஸ்ஸலாமு அலைக்கும்அளவற்ற அருளாளன் நிகரே இல்லா அன்புடையோன் அல்லாஹுவின் பெயரால் ஆரம்பம் செய்து ...
 

 சாட் பண்ணுவதை பற்றி கொஞ்சம் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் இந்த கட்டுரையை அமைக்கின்றேன்..

இது சரியா பிழையா என விவாதம் பண்ண போனால் விளைவுகள் பாதகமாகவே அமையும் ஆயினும் உண்மை என்னவென்றால் இது தவிர்க்க படவேண்டிய ஒன்று...சாட் பண்ணுவது நேர்முகமாக அல்லாமல் மறைமுகமாக ஒரு ஆணும் பெண்ணும் தனிமையில் இருப்பதை போன்றதே..எங்கு ஆணும் பெண்ணும் தனித்திருக்கிறார்களோ அங்கு மூன்றாவதாக ஷெய்த்தான் வந்துவிடுகிறான்.((நபி மொழி)) நாம் எவ்வளவு தான் நல்லவர்களாக இருந்தாலும் நம் எண்ணங்களில் ஊடுருவியுள்ள ஷெய்த்தான் நல்லவன் இல்லையே! நம்மை வழி தவற செய்வதுதான் அவன் தலையாய நோக்கம்..
       நாம் மார்க்கம் சம்பந்தமான விடயங்கள் தான் பகிர்ந்து கொள்கிறோம் என சொல்லி கொள்பவர்களும் இருக்கின்றனர்.எனினும் எவரின் நம்பகத்தன்மையும் யாரும் அறியமுடியாது.அப்படியிருக்க ஒருவர் நல்லவர் என்று நினைக்கும் அதே நேரத்தில் அவர் கெட்டவராகவும் இருக்க வாய்பிருக்கிறது. மேலும் ஒருவர் மற்ற நபர்களுடன் பொதுபடையாக பழக வேண்டிருப்பதால் முடிந்த அளவிற்கு தன்னை நல்லவனாகவே தான் காட்டிக்கொள்வார். ஆக இணையத்தில் இருப்பவர்கள் ஒன்று நல்லவராக இருக்கலாம்.அல்லது நல்லவராக நடிக்கலாம். ஏனெனில் உள்ளங்களில் உள்ளவற்றை நன்கு அறிந்தவன் அல்லாஹு ஒருவன்தான்.எப்படித்தான் சகோதரங்கள் என்ற வார்த்தைகளை பிரயோகித்தாலும் உண்மையான சகோதரங்கள் ஆகிவிடாது..மார்க்கத்தில் உடன் பிறவா சகோதரங்கள் என்று ஒன்று இல்லை... வீணான பேச்சுக்கள் தேவையில்லாத விடயங்கள் தவிர்க்க பட வேண்டும்.ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் நம்மால்முடிந்தவரை மற்றவர்களுக்கு நன்மைகளை பெற்று கொடுக்க முயற்சிக்க வேண்டுமே தவிர பாவங்களுக்கு நாம் காரணமாக அமைந்து விட கூடாது.சாட் பண்ணுவது வழி தவறுதல்களுக்கு அழைத்து செல்லுமே தவிர அவற்றால் நன்மைகள் விளைவது மிகவும் குறைவு
  • அறிமுகம் இல்லாத புதிய நபர்களுடன் குறிப்பாக எதிர்பாலினத்துடன் சாட் பண்ணுவதை தவிர்ப்பது சிறந்தது 
  • இரவு நேரத்தில் காலம் தாழ்த்தி சாட் பண்ணுவது தவிர்க்கப்பட வேண்டும்
என் அன்புக்குரிய சகோதரிகளே...!!!
''நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள். (33;32)'
         நபியின் மனைவிமார்களுக்கே இந்த கட்டளை என்றால் நாம் எல்லாம் எங்கே ?
தயவு செய்து நளினமான பேச்சுகளை தவிர்த்து கொள்ளுங்கள். நண்பன்தானே என்ற நோக்கில் தொலைபேசி இலக்கங்களை பகிர்ந்து கொள்வது, புகைப்படங்களை பகிர்ந்து கொள்வது. தொலைபேசியில் பேசுவது..இவை எல்லாம் நம் மார்க்கம் கற்றுத்தந்த வழிமுறைகள் அல்ல.என்னதான் நண்பன் , சகோதரன் என்றாலும் அல்லாஹு ஹராம் ஆக்கியது ஹராம் தான் அதை மாற்றும் அதிகாரம் எவருக்கும் இல்லை.
அன்புக்குரிய சகோதரர்களே! பெண்களை பாவம் செய்வதற்கு காரணமாக நீங்கள் இருப்பதை தவிர்த்து கொள்ளுங்கள் 
அவர்களின் பேச்சுகளில் பிழைகள் இருப்பின் சுட்டிகாட்டுங்கள் அவர்கள் தவறிழைக்கும் வேலையில் கண்டியுங்கள் மாறாக சுதந்திரம்,சம உரிமை எனும் பெயரில் தட்டி கொடுக்காதீர்கள்,ஊக்கபடுத்தாதீர்கள் 
நாம் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகள் நாளை நம் பொறுப்புகள் பற்றி விசாரிக்கப்படுவோம்.அல்லாஹுவின் முன் நாளை நிற்க போவதை எண்ணி அஞ்சி கொள்வோம்.நம்  இறைவனிடம் நாம் பதில் சொல்லியே ஆகவேண்டும். ஏனெனில் எத்தனையோ சகோதரிகளின் அனுபவமும் அவல நிலையுமே வெளிப்பட்டு இவ்வுண்மைக்கு சாட்சியாக இருக்கின்றது. நாளை மறுமையை அஞ்சி கொள்வோமாக!
சுவனம் எனும் எம் இலட்சிய பயணத்தில் விளையும் இடையூறுகளை இறைவனுக்காக களைவோமாக !
அல்லாஹு நம் அனைவரையும் நேரான வழியில் செலுத்துவானாக !!
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்....!!!

ஈமான் கொண்டவர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; இன்னும் எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை, ஷைத்தான் மானக் கேடானவற்றையும், வெறுக்கத்தக்கவற்றையும், (செய்ய) நிச்சயமாக ஏவுவான்; அன்றியும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், உங்களில் எவரும் எக்காலத்திலும் (தவ்பா செய்து) தூய்மையயடைந்திருக்க முடியாது - எனினும் தான் நாடியவர்களை அல்லாஹ் துய்மைப் படுத்துகிறான் - மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.  (24:21)
Share this blog
Repost0